அவரது பெயர் டி.என்.மைத்ரா (56). ஹவ்ரா-பன்ஸ்குரா ரயிலை இன்று காலை 7. 30 மணிக்கு பன்ஸ்குரா ரயில் நிலையத்திற்கு ஓட்டி வந்தார். பின்னர் ரயில் கார்டிடம் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை தென் கிழக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது அவருக்கு திடீர் என்று அதிகமாக வியர்த்துள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மைத்ரா வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ரயிலை ஓட்டிக் கொண்டு வந்தபோதே அவருக்கு உடல் நலம் சரியில்லை. இருப்பினும் மிகவும் சாமர்த்தியமாக ரயிலை பன்ஸ்குரா வரை ஓட்டிக் கொண்டு வந்தவர், அங்கு உடல் நலம் மோசமாகி உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment