
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
காமன்வெல்த் போட்டிகள் நேற்று பிரமாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கின. இன்று முதல் போட்டிகள் தொடங்கியுள்ளன.
இந்தியாவுக்கு முதல் வெற்றி டென்னிஸ் மூலம் வந்துள்ளது. இன்றுகாலை நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் போபண்ணா தன்னை எதிர்த்து மோதிய உகாண்டா வீரர் ராபர்ட்ஸை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
அடுத்து இன்று நடைபெறும் கலப்பு இரட்டையர் போட்டியில் போபண்ணா-நிரூபமா சஞ்சீவ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் பால் ஹென்லி-ரோடினோவா அனஸ்டாசியா ஜோடியை எதிர்கொள்கிறது.
இன்று நடைபெறும் பிற போட்டிகளில் பூஜாஸ்ரீ வெங்கடேஷ், ருஷ்மி சாட்டர்ஜி ஆகியோர் ஒற்றையர் போட்டிகளிலும், சானியா மிர்ஸா, லியாண்டர் பயஸ் கலப்பு இரட்டையர் போட்டியிலும் மோதவுள்ளனர்
No comments:
Post a Comment