16 March 2012

மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்


மொத்த செலவு ரூ 14.9 ட்ரில்லியனாக உயர்வு. கடந்த பட்ஜெட்டை விட இது 29 சதவீதம் அதிகம் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி).

விலை குறையும் பொருட்கள்: எல்சிடி, எல்இடி, சைக்கிள், சினிமா டிக்கெட், கேன்சர் மற்றும் எச்ஐவி மருந்துகள் விலை

விலை உயரும் பொருட்கள்: ஏஸி, பிரிட்ஜ், மொபைல் போன் கட்டணம், சிகரெட் விலை

தங்கம், பிளாட்டினம் மீதான சுங்க வரி 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு

வைரம் மீதான வரிகள் உயர்வு

விமானங்கள், ரயில்களுக்கான கருவிகள் இறக்குமதி மீதான சுங்க வரி ரத்து

சுத்திகரிக்கப்பட்ட தங்கம் மீதான சுங்க வரி 2 மடங்காக உயர்வு

மொபைல் போன் பாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி ரத்து

பட்ஜெட் சொல்வது என்ன?: ஆடம்பர பொருள்கள், ஓட்டல் உணவுகள், விமானப் பயணங்கள், கார்கள் விலை கிடுகிடு உயர்வு!

பிராண்டட் ஆடைகள் மீதான கலால் வரி (excise duty) 12 சதவீதம் உயர்வு

எல்ஈடி, எல்சிடி மீதான சுங்க வரி ரத்து

பங்குகளை வாங்கி விற்க 20 சதவீத வரிவிலக்கு

சேவை வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்வு

சிகரெட் மீதான கலால் வரி உயர்வு

அனல் மின் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளிக்கு சுங்க வரி ரத்து

உரத் தொழிற்சாலைகளுக்கான கருவிகளுக்கு 5 சதவீத சுங்க வரி ரத்து

2012-13ம் ஆண்டில் அரசின் செலவுகள் 29% உயரலாம்

சமையல் எரிவாயு மீதான சுங்க வரி (customs duty) நீக்கம்

நிலக்கரி இறக்குமதி மீதான சுங்க வரி முழுமையாக நீக்கம்

2012-13ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 5.1 சதவீதக்குள் அடக்க இலக்கு

பெரிய கார்கள் மீதான வரி 27% உயர்வு

2013 நிதியாண்டில் சந்தையில் ரூ. 4.8 லட்சம் கோடி கடன் திரட்ட திட்டம்

பள்ளிக் கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு

அடிப்படை கலால் வரி (excise duty) 12% உயர்வு

சேவை வரி (service tax) உயர்வு மூலம் ரூ. 18,660 கோடி அதிக வருவாய் கிடைக்கும்

7 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்களாக தரம் உயர்வு

விவசாயிகள் கடன் அட்டைகளை அனைத்து ஏடிஎம்களிலும் பயன்படுத்தலாம்

பான் கார்டு மூலம் வருமான வரி செலுத்தாதோரை கண்டறிய திட்டம்

பட்ஜெட் சொல்வது என்ன?: வருமான வரி கட்டுவோருக்கு பெரிய சலுகைகள் ஏதும் இல்லை.. கொஞ்சமே கொஞ்சம் சலுகை

வருமான வரி விலக்கு ரூ. 2 லட்சமாக உயர்வு (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை)

ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி

ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20%

ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி


2012ம் ஆண்டில் திட்டமில்லா செலவுகள் ரூ. 9.7 லட்சம் கோடி

கறுப்புப் பணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். சிறப்பு பிரிவும் தொடங்கப்படும்

பிரணாபின் 'தனியார், அந்நிய மய பட்ஜெட்' - தூங்கி வழியும் பங்கு மார்க்கெட் - ரிலையன்ஸ், டாடா பங்குகள் சரிவு

2012ம் ஆண்டில் வரிகள் மூலமான வருவாய் ரூ. 10.77 லட்சம் கோடி

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு

2012ம் நிதியாண்டில் நாட்டின்நிதிப் பற்றாக்குறை 5.9% சதவீதம்

மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட உற்பத்தித் திறன் உயர்வு

நாட்டில் போலியோ முற்றாக ஒழிக்கப்பட்டது

12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 புதிய பள்ளிகள்

பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1.95 லட்சம் கோடியாக உயர்வு

பட்ஜெட் சொல்வது என்ன: இனி மானியங்கள் பெருமளவு 'கட்'. ரேஷன், விவசாயத்தில் மட்டும் குறைந்த அளவு தொடரும்!

அடிப்படைக் கல்விக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 25,555 கோடி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களுக்கு வட்டி குறைப்பு

ராஜிவ் காந்தி பெயரிலான முதலீட்டுத் திட்டத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு

பங்குகள் மூலமான புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகம்

பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த ரூ 12040 கோடி

குடிமைப் பொருள் வழங்கல் முழுக்க முழுக்க கணிணிமயமாக்கப்படும்

இனி கிஸான் கிரடிட் கார்டுகளை அனைத்து ஏடிஎம்களிலும் உபயோகிக்கலாம்

ஊரக குடிநீர், கழிவு நீர் வெளியேற்ற திட்டங்களுக்கு ரூ. 14,000 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ரூ 11937 கோடி

கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ரூ 24000 கோடி

அரசின் சொத்துக்களை விற்று ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்

அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கு நிதி திரட்ட ரூ. 60,000 கோடிக்கு வரியில்லா பத்திரங்கள்

தேசிய அடையாள அட்டைத் திட்டத்துக்கு இந்த ஆண்டு மேலும் ரூ. 14,232 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் சொல்வது என்ன?: விவசாயிகளின் ஓட்டுக்கு மீண்டும் குறி.. கடன், மானியத்துக்கு 1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு

விவசாயத்துறைக்கு உதவும் நபார்ட் வங்கிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு

விவசாய கடன்களுக்கான வட்டி இந்த ஆண்டும் தளர்வு

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ. 5.75 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் கோடி அதிகம்

நீர்ப்பாசனத்துக்கு என தன நிறுவனம். நீர்ப் பாசன திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் சொல்வது என்ன?: உள்கட்டமைப்பு, சில்லறை வர்த்தகம், தொழில்துறை, வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகளுக்கு தாராளம்

பட்ஜெட் சொல்வது என்ன?: அனைத்துத் துறைகளிலும் தாராள தனியார் மயம்

பட்ஜெட் சொல்வது என்ன?: கிங்பிஷருக்கு உதவ விமானத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி!

நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பு

மின்துறை, வீடுகள்-சாலை கட்டுமான நிறுவனங்கள் வெளிநாட்டு கடன்கள் வாங்க அனுமதி

2013ம் ஆண்டில் 8,800 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

2013ம் ஆண்டில் விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்பட்டு ரூ. 20,208 கோடி ஒதுக்கீடு

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு 50 லட்சம் கோடி இலக்கு - தனியாரைச் சேர்க்கவும் முடிவு

மின் உற்பத்தித் துறைக்கு நிதி திரட்ட ரூ. 10,000 கோடி வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்

5 ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டம்

விமானப் போக்குவரத்துத் துறையில் 49 சதவீதம் அந்நிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி

இந்திய அரசின் கடன் பத்திரங்களில் அன்னிய முதலீடுகளுக்கு தாராள அனுமதி

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 15,890 கோடி நிதியுதவி

பட்ஜெட் எபெக்ட்: வாகனங்கள் மீது வரி உயரலாம் என்ற யூகத்தால் கார், பைக் நிறுவன பங்குகள் விலை சரிவு

'பட்ஜெட் எபெக்ட்'- பங்குச் சந்தைகள் துள்ளல்- சென்செக்ஸ் குறியீட்டு எண் 180 புள்ளிகள் உயர்வு

சில்லறை வணிகத்தில் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள்

மானியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்

சில்லறை வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டம்

ராஜிவ் காந்தி பெயரில் புதிய முதலீட்டுத் திட்டம்

மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் சில்லறை வணிகத் துறையில் மேலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டுக்கு முயற்சி

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்

தனியார் முதலீடுகளை வேகமாக அதிகரிக்க நடவடிக்கை

இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்

மண்ணெண்ணெய்க்கு நேரடியாக மானியம் தர திட்டம்

3 ஆண்டுகளில் மானியங்களின் அளவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.7%க்குள் குறைக்க திட்டம்

மானியங்களின் அளவு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) 2%க்குள் கட்டுப்படுத்தப்படும்

உணவுப் பொருட்களுக்கு அதிக மானியம்

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கும் மானியத்தை நேரடியாக வழங்க திட்டம்

அந்நியச் செலாவணி 29 சதவீதம் அதிகரிப்பு

விவசாயிகள், குடிமக்களுக்கான மானியங்கள் நேரடியாக வழங்கப்படும். சோதனை முறையில் 50 மாவட்டங்களில் இப்படி வழங்கப்படும்.

பொதுப் பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்தில்

பெட்ரோலிய எண்ணெய் விலைகளின் கடும் உயர்வால். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் சராசரி விலை 1 பேரல் $115

மானியங்களால் தான் நிதிப் பற்றாக்குறை மிகவும் அதிகரிப்பு

நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3.6%. இந்த ஆண்டு அதைக் குறைக்க நடவடிக்கை

ஐரோப்பிய பொருளாதார நிலைமை படுமோசம்

தனியார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை

உற்பத்தித் துறை மீட்சியடைந்து வருகிறது

கடந்த 2 ஆண்டுகளாகவே வளர்ச்சி கடுமையாக பாதிப்பு

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதார நிலைமை பரவாயில்லை

பணவீக்கத்தை கட்டுப்படுத்த சந்தையில் நிதியை கட்டுப்படுத்தியதால் வளர்ச்சி பாதிப்பு

சர்வதேச பொருளாதார சீர்குலைவு இந்தியாவையும் பாதிக்கிறது

2012ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது

பணவீக்க விகிதம் அடுத்த சில மாதங்களில் குறையும்

அடுத்த ஆண்டில் இந்திய வளர்ச்சி 7.6% ஆக உயரும்

கருப்புப் பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை

ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 200 மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்

கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருந்தது

07 March 2012

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து--நன்னாரி!!!


கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து--நன்னாரி!!!


       சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்' என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது.


உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியா ஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.
உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நன்னாரி பால்:

1. நன்னாரி - 200 கிராம்

2. சுக்கு - 50 கிராம்

3. ஏலக்காய் - 25 கிராம்.

செய்முறை:-

நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம்.

 நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.


 நன்னாரி சர்பத்:

நன்னாரி - 200 கிராம்.

தண்ணீர் - ஒரு லிட்டர்.

சர்க்கரை - 1 கிலோ.

எலுமிச்சம்பழம் - 6 (சாறு எடுத்து கொள்ளவும்).
செய்முறை:

1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.

3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.

4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.

தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.


5 மாநிலங்களில் கட்சிகள் வென்ற இடங்கள் முழு விவரம்.


டெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 226 இடங்களிலும் (ஆட்சியமைக்க குறைந்தது 202 இடங்கள் தேவை), ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களிலும், பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 12 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் சமாஜ்வாடி கட்சி 129 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 126 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 6 இடங்களைப் பிடித்துள்ளது. பாஜக 4 இடங்களை இழந்துள்ளது.

உத்தர்கண்ட்டில்...

உத்தர்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் காங்கிரஸ் 32 இடங்களிலும் ஆளும் பாஜக 31 இடங்களிலும் வென்றுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும் சுயேச்சைகளும் சிறு கட்சிகளும் 4 இடங்களிலும் வென்றுள்ளன.

ஆட்சியைப் பிடிக்க 35 இடங்கள் தேவை. இதில் காங்கிரஸை மாயாவதி ஆதரிக்கக் கூடும் என்பதால் 35 இடங்களை அந்தக் கட்சி பிடிக்கவுள்ளது. சுயேச்சைகளுடனும் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது.

பஞ்சாபில்...

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன.

இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க 58 இடங்களே தேவை. அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.

கோவாவில்...

கோவாவில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வென்றுள்ளது.

மற்ற கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலத்தில் பாஜக 10 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை இழந்துள்ளது.

மணிப்பூரில்...

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 42 இடங்களில் வென்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதனால் இந்த மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 11 இடங்களிலும் வென்றுள்ளன.

பாஜகவுக்கு முட்டை தான் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 14 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 7 இடங்களும் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

04 March 2012

மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!



இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் ஆலோசனைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள்.

நட்பாய் அணுகுங்கள்

பள்ளி, கல்லூரிகளில் சீனியர்கள் எப்பொழுதுமே ஜூனியர்களை ராகிங் செய்ய நினைப்பார்கள். அதே மனோபாவத்துடன்தான் மாமியார்கள் நடந்துகொள்கின்றனர். வீட்டில் அவர்கள்தானே சீனியர். புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று நினைக்கின்றன. சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.

மரியாதை அவசியம்

பெரும்பாலான மாமியார்களை கோபத்திற்குள்ளாக்கும் விசயம் அவர்களை மதிக்காமல் மரியாதைக்குறைவாக நடத்துவதுதான். எனவே அவர்களின் வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மதிப்பு மரியாதையை கொடுங்கள். அப்புறம் உங்களைப் போல ஒரு மருமகள் உண்டா என்று எல்லோரிடமும் கூறி பெருமைப்படுவார் உங்கள் மாமியார்.

பொறுப்புணர்வு

30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும்.

எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரை நிம்மதியடையவைக்கும். அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. எனவே இரண்டு குடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள்.

அன்புமழை பொழியுங்கள்

மாமியார் – மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது. மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.

சொல்வதை கேளுங்கள்

மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும். எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.

மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றைய மருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம். ஏனெனில் இன்றைக்கு நாம் செய்யும் காரியம் பின்னாளில் நமக்கும் நடக்க நேரிடலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

2012 - புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


சென்னை, மார்ச். 3-

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்


Published in: MALAIMALAR